எய்ட்ஸ். இந்த வார்த்தை 15 ஆண்டுகளுக்கு முன்னால் பொதுவெளியில் ஏற்படுத்தியிருந்த அசூயையை, அச்சத்தை, வெறுப்பை மறக்கவே முடியாது. ஹெச்ஐவி பாதிப்புக்குள்ளானவர்களைக் கிட்டத்தட்ட மனிதகுலத்திலிருந்தே விலக்கிவைப்பதுபோல் நடந்துகொண்டது நமது சமூகம். துரதிர்ஷ்டவசமாக இன்றைக்கும் அந்த மனநிலையில் பெரிய மாற்றம் இல்லை. எய்ட்ஸ் என்பது நோயல்ல, குறைபாடு எனும் அளவுக்கு ஒரு புரிதல் உருவாகியிருக்கிறது. ஆனால், அதற்கே 10 ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. ஹெச்ஐவி பாதிப்புக்குள்ளானவர்களின் துயரம் இன்றும் தொடரவே செய்கிறது. இதோ, கர்ப்பிணிக்குச் செலுத்தப்பட்ட ரத்தத்தில் ஹெச்ஐவி வைரஸ் கலந்திருந்த சம்பவத்தில் ரத்த தானம் செய்த இளைஞர் மனவுளைச்சலில் தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து பொதுவெளியில் நடந்த அபத்த உரையாடல்களெல்லாம் ஹெச்ஐவி பற்றிய விழிப்புணர்வின்மைக்குச் சான்றுகள்.
Click this link for the report / article. https://tamil.thehindu.com/opinion/columns/article25907203.ece

ஹெச்ஐவி பாதிப்பு: இன்னும் மாறாத மக்கள் மனநிலை
Recent Posts